பா.ஜ.க தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும்: முரளிதர்ராவ்
கோவை: தென் மாநிலங்களில், வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.க கூட்டணி வலுப்பெறும்'' என, அக்கட்சியின் தேசிய பொதுச் செயலர், முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.
கோவையில் பல்வேறு தொழில் அமைப்பின் நிர்வாகிகளை சந்திப்பதற்காக, பா.ஜ.க தேசிய பொதுச் செயலர் முரளிதர் ராவ், நேற்று வந்தார்.
அப்போது, கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
ம.பி., ராஜஸ்தான், டில்லி, சத்தீஸ்கர், ஆகிய நான்கு மாநிலங்களில், பா.ஜ.க அதிக இடங்களைக் கைப்பற்றி, வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம், அம்மாநில மக்கள் காங்கிரஸ் கட்சியை, ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளனர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, மோடி தலைமையிலான நிரந்தர ஆட்சியை மக்கள் விரும்புகின்றனர்.
நாட்டில் தற்போது ,35 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் அதிகளவில் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் நிரந்தரமான, குழப்பமற்ற ஆட்சியை விரும்புகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள, பெரிய கட்சியான பா.ஜ., தனிப்பட்ட முறையில், 272 இடங்களை பிடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பணிகள் நடக்கிறது.
கூட்டணி ஆட்சிதான்
அதே நேரத்தில், மத்தியில் கூட்டணி ஆட்சி தான் அமைப்போம். தமிழகத்தில், 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும், பாரதீய ஜனதா கட்சி தனி கவனம் செலுத்தி வருகிறது. தொகுதி நிலவரம் பற்றி, கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
வலுவான கூட்டணி
வரும் நாடாளுமன்ற தேர்தலில், தென் மாநிலங்களில், பா.ஜ., கூட்டணி, கூடுதல் பலம் பெறும். அதேபோல், பா.ஜ.க கூட்டணிக்கு விரைவில் புதிய கட்சிகள் வந்து சேரும்.
தமிழர்கள் நலன்
இலங்கை தமிழர்கள் நலனில், பாஜக எப்போதும் அக்கறை செலுத்தி வருகிறது. அந்நாட்டில், தமிழர்களுக்கு சம உரிமை, என்பதே அதிகார பகிர்வாக இருக்க வேண்டும். இவ்வாறு, முரளிதர் ராவ் கூறினார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications