21 வயதுக்கு குறைவானவர்களுக்கு கட்டாயம் சரக்கு கிடையாது... டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி !
சென்னை: டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு சரக்கு விற்க கூடாது. வயது குறித்த சந்தேகம் எழுந்தால் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டையை வாங்கி வயதை உறுதிசெய்து கொண்டு, மதுபாட்டில் வழங்க வேண்டும் என கடை ஊழியர்களை டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில், அரசு சார்பில் டாஸ்மாக் கடை நடத்தப்படுகிறது. இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என பலர் இன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலைமை உருவாகிக்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூடவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் நாளுக்கு நாள் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி வரும் காலங்களில் டாஸ்மாக் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்று மாறிவிடும் போல் தெரிகிறது. ஏனேனில் காதுகுத்து முதல் அனைத்து விழாக்களுக்கும் சரக்கு பார்ட்டி இல்லாமல் இருப்பதில்லை.
இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு சரக்கு விற்பனை செய்யக் கூடாது என்று திடீர் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘டாஸ்மாக் கடைகளில், 60 நாட்களுக்கு மேல் விற்கப்படாமல் தேங்கி கிடக்கும் மதுபாட்டில்களை குடோனுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். 21 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் மதுபாட்டில்கள் விற்க கூடாது. வயது குறித்து சந்தேகம் எழுந்தால், அவர்களிடம் இருந்து வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு ஆகியவற்றை வாங்கி பார்த்து, 21 வயதை உறுதி செய்துகொண்டு மது பாட்டில் வழங்க வேண்டும்.
வயது குறைவானவர்களுக்கு மதுபாட்டில் விற்கப்படுவது தெரியவந்தால், கடை ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்களுக்கு மதுபாட்டில் விற்கும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது' என்றார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications