21 வயதுக்கு குறைவானவர்களுக்கு கட்டாயம் சரக்கு கிடையாது... டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி !
சென்னை: டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு சரக்கு விற்க கூடாது. வயது குறித்த சந்தேகம் எழுந்தால் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டையை வாங்கி வயதை உறுதிசெய்து கொண்டு, மதுபாட்டில் வழங்க வேண்டும் என கடை ஊழியர்களை டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில், அரசு சார்பில் டாஸ்மாக் கடை நடத்தப்படுகிறது. இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என பலர் இன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலைமை உருவாகிக்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூடவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் நாளுக்கு நாள் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி வரும் காலங்களில் டாஸ்மாக் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்று மாறிவிடும் போல் தெரிகிறது. ஏனேனில் காதுகுத்து முதல் அனைத்து விழாக்களுக்கும் சரக்கு பார்ட்டி இல்லாமல் இருப்பதில்லை.
இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு சரக்கு விற்பனை செய்யக் கூடாது என்று திடீர் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘டாஸ்மாக் கடைகளில், 60 நாட்களுக்கு மேல் விற்கப்படாமல் தேங்கி கிடக்கும் மதுபாட்டில்களை குடோனுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். 21 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் மதுபாட்டில்கள் விற்க கூடாது. வயது குறித்து சந்தேகம் எழுந்தால், அவர்களிடம் இருந்து வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு ஆகியவற்றை வாங்கி பார்த்து, 21 வயதை உறுதி செய்துகொண்டு மது பாட்டில் வழங்க வேண்டும்.
வயது குறைவானவர்களுக்கு மதுபாட்டில் விற்கப்படுவது தெரியவந்தால், கடை ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்களுக்கு மதுபாட்டில் விற்கும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது' என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications