நாங்க பஞ்சத்தில் அடிபட்ட கூட்டணி..பூத் செலவுன்னு தண்ணியடிக்க காசு கேட்காதீங்க... வைகோ
கடலூர்: 'தாங்கள் பஞ்சத்தில் அடிபட்ட கூட்டணியாக இருக்கிறோம்; பூத் செலவுக்கென மது அருந்த பணம் கேட்காதீர்கள் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தொடர்ந்து பேசிவருகிறார்.
கடலூரில் தமாகா வேட்பாளர் சந்திரசேகரனுக்கு ஆதரவு திரட்டி வைகோ பேசியதாவது:
பஞ்சத்தில் அடிபட்ட கூட்டணியாக நாங்கள் இருக்கிறோம். கூட்டணி கட்சித் தொண்டர்களே ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
முதல் ரவுண்டுக்கு ரூ.15 ஆயிரம், இரண்டாம் ரவுண்டுக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாம் ரவுண்டுக்கு ரூ.15 ஆயிரம் என வேட்பாளர்களிடம் பூத் செலவுக்கு பணம் கேட்காதீர்கள். வேட்பாளர்கள் மூர்ச்சையாகி விழுந்து விடுவார்கள்.
எதற்காக பூத் செலவுக்கு பணம். பங்கு போட்டு தண்ணியடிக்கவா. நான் உண்மையை பேசுகிறேன். டீ, காபி செலவுக்கு காசு கொடுத்தா வாங்கிக்கங்க. கூட தேவைப்பட்டா உங்கள் கை காசை போட்டு செலவு செய்யுங்க.
இவ்வாறு வைகோ பேசினார்.
வைகோ செல்லும் இடமெல்லாம் இப்படி பேசுவது கூட்டணி கட்சி தொண்டர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளதாம்.