தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறோமா?: ஸ்டாலின் விளக்கம்
சென்னை: கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவை தங்கள் கூட்டணிக்கு வரவழைக்க திமுகவும், காங்கிரஸும் பெருமுயற்சி செய்தது. மறுபக்கம் பாஜக தேமுதிகவை தனது கூட்டணியில் இணைக்க நடையாய் நடந்து ஓய்ந்தது.

தேமுதிக தலைவர் விஜயகாந்தோ தனது கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவித்துவிட்டார். அவரின் இந்த முடிவு கட்சி நிர்வாகிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் தேமுதிக திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என மனிநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த சூழலில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கட்சியின் தலைவர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தேமுதிகவை எங்கள் கூட்டணிக்கு வருமாறு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேமுதிக திமுக கூட்டணிக்கு வர வேண்டும் என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளது அவருடைய தனிப்பட்ட கருத்து ஆகும். திமுக கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வர உள்ளன. அதனால் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை துவங்கப்படவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications