யாருமே என் மகளுக்கு உதவ வரவில்லை.. சுவாதியின் தந்தை வேதனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: என் மகள் சுவாதி மிகவும் இளகிய மனம் படைத்தவள். தனது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவள் ஆர்வமாக இருந்து வந்தாள். ஆனால் அந்த ஆசை கடைசி வரை நிறைவேறாமலேயே போய் விட்டது. எனது மகளைக் காப்பாற்ற யாருமே முன்வராமல் போய் விட்டனர் என்று கூறியுள்ளார் சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன்.

சந்தான கோபால கிருஷ்ணன் குடும்பம் இன்னும் வேதனையிலிருந்து மீளவில்லை. சுவாதியை இழந்த வேதனையை விட தங்களது குழந்தையைக் காப்பாற்ற யாருமே முன்வரவில்லை என்பதுதான் அவர்களை நிலை குலைய வைத்துள்ளது.

அவரது தந்தை தனது 24 வயது மகள் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தனது மகள் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வேடிக்கை பார்த்துள்ளனர்

வேடிக்கை பார்த்துள்ளனர்

எனது மகளை தாக்கிய நபரை யாருமே தடுக்க முன்வரவில்லை. மாறாக அனைவரும் அமைதியாக வேடிக்கை பார்த்துள்ளனர். இதனால் நாங்கள் எங்களது மகளை இழந்து தவிக்கிறோம்.

இளகிய மனம் படைத்தவள்

இளகிய மனம் படைத்தவள்

எனது மகள் மிகவும் இளகிய மனம் படைத்தவள். யாரிடமும் அதிர்ந்து கூட பேச மாட்டாள். யாராவது ஏதாவது சொன்னால் கூட வீட்டுக்கு வந்து எங்களிடம்தான் அழுவாள்.

உறுப்பு தானம் செய்ய ஆசைப்பட்டார்

உறுப்பு தானம் செய்ய ஆசைப்பட்டார்

தனது உடல் உறுப்புகளை தானமாக தர ஆர்வமாக இருந்து வந்தாள். அதுகுறித்து பேசியபடி இருப்பாள். ஆனால் இன்று அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விட்டது. அப்படி இருந்திருந்தால் கூட அவளை அந்த உறுப்பு தானம் மூலமாக பார்த்து திருப்தி அடைந்திருப்போம்.

தவிர்த்திருக்கலாம்

தவிர்த்திருக்கலாம்

யாராவது அந்தக் கொலைகாரனை தடுக்க முயற்சித்திருந்தால் அல்லது அவனை நோக்கிப் பாய்ந்திருந்தால் நிச்சயம் எனது மகளைக் காப்பாற்றியிருக்கலாம். ஆனால் என்ன காரணத்தாலோ யாருமே உதவ முன்வராமல் போய் விட்டனர். இது ஒரு வகையில் சுய நலம்தான். யாருக்கோ என்ற எண்ணம். ஆனால் நிச்சயம் நாங்கள் அப்படி நடந்திருக்க மாட்டோம். எங்களது மகளுக்கு யாருமே உதவ முன்வராமல் போய் விட்டனரே.

நம்பிக்கை உள்ளது

நம்பிக்கை உள்ளது

கொலையாளியை நிச்சயம் பிடித்து விடுவோம் என்று போலீஸார் உறுதி அளித்துள்ளனர். நாங்கள் காவல்துறை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளோம். சம்பவம் நடந்த இடத்தில் பாதுகாப்பு சரியாக இல்லை என்பதும் எனது மகளின் துயர முடிவுக்குக் காரணம். அதை நான் மறுக்க மாட்டேன். சம்பவம் நடந்தபோது அங்கு போதிய அளவில் காவல்துறையினர் இல்லை என்றார் சந்தான கோபாலகிருஷ்ணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+