தமிழக கோவில்களில் பூ, பழம் விற்க அனுமதி கிடையாது.. இந்து அறநிலையத்துறை அதிரடி
புராதன கோவில்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருள் விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: புராதன கோவில்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருள் விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சில மாதங்களுக்கு முன் தீ விபத்து நிகழ்ந்தது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் அதிகமாக சேதம் அடைந்தது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் சில கோவில்களில் தீபம் ஏற்ற தடைவிதிக்கப்பட்டு வருகிறது. அதன்பின் அனைத்து கோவில்களுக்கு உள்ளே உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார்.
ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில் வாளாகத்தில் பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனை செய்யலாம் என்ற சுற்றறிக்கையை கோவில்களுக்கு அனுப்பியது. இதற்கு தடை கிடையாது என்று கூறியது.
இந்த நிலையில் இதற்கு எதிரான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வந்தது. அதில் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத் துறை புதிய பதில் மனு அளித்துள்ளது.
அதன்படி புராதன கோவில்களில் பூ, பழம் உள்ளிட்ட பூஜை பொருள் விற்பனைக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். தமிழகத்தில் அறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில் வாளாகத்தில் பூ, மாலை உள்ளிட்ட பூஜை பொருள்கள் விற்பனை செய்யலாம் என்ற சுற்றறிக்கையை திரும்ப பெறுகிறோம், என்றுள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications