தமிழகத்தில் முழு வறட்சி இல்லை... சுப்ரீம்கோர்ட்டில் பகீர் பொய் சொன்ன எடப்பாடி அரசு
தமிழகத்தில் முழுமையான வறட்சி இல்லை என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி அரசு தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் முழுமையான வறட்சி என்பதே இல்லை என உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி கோரத்தாண்டவமாடுகிறது. இதனால் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டுபோயுள்ளனர்.

வறட்சி மாநிலம்
இதையடுத்து தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தார். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்கவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

வறட்சியே இல்லை- தமிழக அரசு
இந்நிலையில் தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையின் போது தமிழகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் நரசிம்மா, தமிழகத்தில் முழு வறட்சி இல்லை; ஆங்காங்கே ஒரு சில இடத்தில் வறட்சி இருக்கிறது என கூறினார்.

விவசாயிகள் எதிர்ப்பு
இதனை விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர்கள் கடுமையாக எதிர்த்து வாதிட்டனர். இதனையடுத்து, கடனைக் கட்டாத விவசாயிகளிடம் வங்கிகள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழக அரசுக்கு உத்தரவு
அத்துடன் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல்












Click it and Unblock the Notifications