விஜயகாந்தின் தனித்துப் போட்டி அறிவிப்பால் திமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை- மு.க. ஸ்டாலின்
சென்னை: சட்டசபை தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்ற விஜயகாந்த் அறிவிப்பால் திமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் கருணாநிதி இல்லத்தில் திமுக மூத்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேமுதிகவின் தனித்துப் போட்டி அறிவிப்பு, தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,
தனித்துப் போட்டியிடுவோம் என்ற விஜயகாந்த்தின் அறிவிப்பால் திமுகவுக்கு எந்த ஒரு பின்னடைவும் ஏற்படவில்லை. தேமுதிகவின் உரிமையில் நாங்கள் தலையிடவும் விரும்பவில்லை. கூட்டணிக்கான எங்கள் அழைப்பை ஏற்பதும் நிராகரிப்பதும் தேமுதிகவின் உரிமை என்றார்.












Click it and Unblock the Notifications