ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்து என்ன பயன்? சீமான் கேள்வி
சென்னை:ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதன் மூலம் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் புழல் சிறையில் இருந்த ராம்குமார் மர்மமான முறையில் மரணமடைந்தார். இவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் போது தனியார் மருத்துவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று அவரது தந்தை உயர் நீதிமன்றத்தில் இருந்து உச்ச நீதிமன்றம் வரை நீண்ட போராட்டத்தை நடத்தினார். ஆனால் எந்த பலனும் கிடைக்காத நிலையில் இன்று ராம்குமாரின் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள சிவாஜி கணேசனின் உருவ சிலைக்கு அவரது 89வது பிறந்த நாளையொட்டி மாலையிட்டு மரியாதை செலுத்திய சீமானிடம் ராம்குமாரின் பிரேத பரிசோதனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்வதன் மூலம் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை என்று கூறினார்.
மேலும் முதல்வர் உடல்நிலை குறித்து பரவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications