இந்தியாவில் 30,000 பேரை வீட்டுக்கு அனுப்பிய நோக்கியா: தொ.மு.ச. பேரவை கண்டனம்
சென்னை: இந்தியாவில் நோக்கியா நிறுவனம் 30 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்கியதற்கு தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவை பொதுச் செயலாளர் மு.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலகத்திலேயே மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனம் உலகம் முழுவதிலும் உள்ள ‘நோக்கியா' நிறுவனத்தை விலைக்கு வாங்கிவிட்டது. மைக்ரோசாப்ட்-‘நோக்கியா' ஒப்பந்தப்படி உலகளவில் கைப்பேசி தயாரிக்கும் உரிமம் ‘நோக்கியா' நிறுவனத்திற்கு கிடையாது. எனவே ‘நோக்கியா' நிறுவனம் இந்தியாவிலுள்ள தன் நிறுவனத்தை மூட முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது.
தேர்தல் வாக்குப் பதிவு முடிவுற்றவுடன் ஒப்பந்தத் தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேரை முதல் வாரத்திலும், அடுத்த வாரத்தில் பயிற்சியாளர்கள் 6 ஆயிரம் பேரையும் வெளியேற்றின. ஆக ஒட்டுமொத்தமாக 30 ஆயிரம் தொழிலாளர்கள் சந்தடியின்றி சிறப்புப் பொருளாதார மண்டலத்திலிருந்து காலி செய்யப்பட்டுவிட்டார்கள்.
காலி செய்யப்பட்ட வெற்றிடத்தில் மார்க்சிஸ்ட் போராடப் போவதாக செய்திகள் வந்துள்ளன. ‘நோக்கியா' நிறுவனத்தை வாங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தை இயங்கவிடாமல் செய்த அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கூட்டணியின் பின்னணி என்ன? என்பது புரியாமல் 30 ஆயிரம் பேர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். உள்நாட்டில் உற்பத்தியாகிய ‘நோக்கியா' கைப்பேசியை குறைந்த விலையில் வாங்கியவர்களுக்கு, இனி அயல்நாட்டு கைப்பேசியை வாங்க நிர்ப்பந்திக்கும் நிலையினை அதிமுக அரசு ஏற்படுத்தியுள்ளது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications