For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இறைச்சி சாப்பிடுபவர்கள் கொலையாளிகள்.. டிவிட்டரில் வகை வகையாக ட்ரென்ட்டாகும் ஹேஷ்டேக்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: இறைச்சிக்கு எதிராக டிவிட்டரில் வகை வகையான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன.

ஞாயிற்றுக்கிழமை என்றாலே பெரும்பாலானோருக்கு நான் வெஜ் நாள்தான். வாரத்தில் 6 நாட்கள் பிஸியாக வேலை பார்த்துவிட்டு கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையில் இறைச்சி சமைத்து குடும்பத்தோடு அமர்ந்து ஒரு வெட்டு வெட்டுவதை பெரும்பாலான மக்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் காலையிலேயே டிவிட்டரில் இறைச்சிக்கு எதிரான ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்டாகி வருகின்றன. அதன்படி #NonVegetarians_Are_Killers, #Saint Rampal Ji Maharaj, #Stop Eating Meat ஆகிய ஹேஷ்டேக்குகள் இந்திய அளவில் ட்ரென்ட்டிங்கில் உள்ளன.

குடியுரிமைச் சட்டம்... ரஜினி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? - கார்த்தி சிதம்பரம் குடியுரிமைச் சட்டம்... ரஜினி ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா? - கார்த்தி சிதம்பரம்

இறைச்சியை தவிருங்கள்

இறைச்சியை தவிருங்கள்

சாமியார் ராம்பால் ஜி மகரா4 என்பவர் தனியார் தொலைக்காட்சியில் பிரசங்கம் செய்த போது இறைச்சி சாப்பிடுபவர்கள் கொலையாளிகள், விலங்குகளை கொன்று உண்பவர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்றார். ஆகையால் இந்துக்கள், இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இறைச்சி உண்பதை தவிர்க்க வேண்டும் என்றார்.

கடவுள் சொல்லவில்லை

இந்நிலையில் அவரது வார்த்தைகளை அடிப்படையாக கொண்டு இந்த ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட் செய்யப்பட்டு வருகின்றன. விலங்குகளை கொன்று உண்பதை நிறுத்துங்கள். எல்லா உயிரினங்களும் அவரவர் தேசத்தில் கடவுளால் படைக்கப்பட்டவை. இறைச்சி உண்ண வேண்டும் என்று கடவுள் ஒருபோதும் சொல்லவில்லை. அப்படியிருக்கையில் கடவுளின் உத்தரவை ஏன் பின்பற்றுவதில்லை என கேட்டிருக்கிறார் இவர்.

பிசாசுகள்

சைவமாக இருங்கள்!
இறைச்சி சாப்பிடுவதை நிறுத்துங்கள்!
சைவ உணவு உண்பவர்கள் நல்ல நபர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்..
இறைச்சி சாப்பிடுபவர்கள் பிசாசுகளாக கருதப்படுகிறார்கள் என்று கூறுகிறார் இவர்.

மனிதர்கள் சாப்பிட

மனிதர்கள் சாப்பிடுவதற்கு கடவுள் நமக்கு பலனளிக்கும் மரங்களையும், மரக்கன்றுகளையும் கொடுத்திருக்கிறார், கடவுள் இறைச்சியை உண்ண உத்தரவிடவில்லை என தெரிவித்துள்ளார்.

நரகத்தை அடைகிறார்கள்

இறைச்சி சாப்பிடுவதற்கான நடைமுறை மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து இந்து மற்றும் முஸ்லீமை உச்ச கடவுள் கபீர் கண்டிக்கிறார். இறைச்சி சாப்பிடும் கொலையாளிகள் நரகத்தை அடைகிறார்கள் எனவே இறைச்சி சாப்பிடுவதை நிறுத்துங்கள் என பதிவிட்டிருக்கிறார் இவர்.

விளம்பரமா?

விளம்பரமா?

இன்று இரவு 7.30 மணிக்கு சாதனா என்ற தொலைக்காட்சியில் சாமியார் ராம்பால் ஜி மகராஜின் இறைச்சிக்கு எதிரான பிரசங்கத்தை மக்கள் பார்க்க வேண்டும் என்றும் இந்த ஹேஷ்டேக்குகள் மூலம் விளம்பரப்படுத்தப்படுகிறது.

English summary
#NonVegetarians_Are_Killers, #Saint Rampal Ji Maharaj, #Stop Eating Meat, hashtags are trending in India. Its top trending in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X