இன்னும் 3 நாட்களில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கும்:வானிலை மையம்
வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 30ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்த ஆண்டிற்கான வடகிழக்குப் பருவ மழை இன்னும் 3 நாட்களில் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவ மழை கடந்த 20ம் தேதியே தொடங்கும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், வரும் 30ம் தேதி தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலும், வடகிழக்கு பருவமழை இயல்பான அளவு அல்லது அதைவிட குறைந்த அளவில் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் பாலச்சந்திரன் கூறினார்.

மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் தற்போது கியான் புயல் நிலை கொண்டுள்ளது என்றும், வங்கக் கடலின் மேற்கு திசையை நோக்கி அது நகர்ந்து வருவதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
இதனால், தமிழக மீனவர்கள் ஆந்திர கடலோர பகுதிக்கு சென்று மீன் பிடிக்க வேண்டாம் என்றும் பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications