வருது வருது வடகிழக்கு பருவமழை.... பலிக்குமா ரமணன் முன்னறிவிப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை 28-ந் தேதி தொடங்குகிறது என்று சென்னை வானிலை மண்டல ஆராய்ச்சி மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டுக்கு சராசரியாக 44 செ.மீ. மழை பெய்யவேண்டும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக மழை பொய்த்துவிட்டது.

Northeast Monsoon will start Oct. 28?

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இதனிடையே சென்னையில் வானிலை மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் அளித்த பேட்டி:

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டி உள்ள இலங்கை கடற்கரை பகுதியில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகி உள்ளது. அதன் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்துள்ளது.

26-ந் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக வடகிழக்கு பருவமழை 28-ந் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

சென்னையில் மழை

மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை வேப்பேரி, நுங்கம்பாக்கம், தாம்பரம் பகுதிகள் மற்றும் சென்னை சுற்றுப்புறங்களில் நேற்று பகலில் மழை தூறிக்கொண்டே இருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+