For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாமரை வீடு திரும்பியதில் மகிழ்ச்சி; இணைந்து வாழும் எண்ணம் இல்லை: தியாகு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: போராட்டத்தைக் கைவிட்டு மகனுடன் தாமரை வீடு திரும்பியதில் மகிழ்ச்சி, ஆனால் தாமரையுடன் இனியும் இணைந்து வாழும் எண்ணம் இல்லை என்று தியாகு கூறியுள்ளார்.

தனது கணவரும், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவருமான தியாகு கடந்த நவம்பர் மாதம் 23-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறி கவிஞர் தாமரை, பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் தியாகுவின் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

Not Interested To Live With Lyricist Thamarai : Thiyagu

தனது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றால் கணவர் தியாகு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கவிஞர் தாமரை தெரிவித்தார்.

தியாகு மன்னிப்பு

இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று இரவு 9 மணியளவில், வள்ளுவர் கோட்டம் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தாமரையை தியாகு சந்தித்தார். அவரிடமும் மகன் சமரனிடமும் மன்னிப்புக்கோரி கடிதம் ஒன்றை கொடுத்தார். இதைத் தொடர்ந்து தனது தர்ணா போராட்டத்தை முடித் துக்கொண்டு தாமரை வீடு திரும்பினார்.

இணையமாட்டேன்

இதனிடையே இருவரும் இணைந்து வாழப்போகிறீர்களா?என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு கருத்து தெரிவித்த தியாகு, என் வருத்தத்தை ஏற்றுக் கொண்டு இருவரும் வீடு திரும்பியதில் மகிழ்ச்சி. இப்போது வேளச்சேரியில் மகள் வீட்டில் இருக்கிறேன். ஆனால், இனியும் தாமரையுடன் இணைந்து வாழும் எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

English summary
Tamil Activist Thiyagu said,"Not Interested to live with Lyricist/Writer Thamarai".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X