ஆர்.கே.நகர்: துரத்தி வந்த நோட்டாவைத் தூக்கியடித்த டிராபிக்!
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா 1,51, 252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் நோட்டாவிற்கு 2,376 வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதையடுத்து எண்ணிக்கையில் 4,590 ஓட்டுகள் பெற்றதால் டிராபிக் ராமசாமி நோட்டாவுடனான போட்டியில் ஜெயித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்ட சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பதிவான அனைத்து தபால் ஓட்டுகளும் ஜெயலலிதாவுக்கே கிடைத்திருந்தன.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்த இடைத் தேர்தலை, தி.மு.க, தே.மு.தி.க, பா.ஜ.க, காங்கிரஸ் உட்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் புறக்கணித்தன. அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் மகேந்திரனும், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உட்பட 28 பேர் போட்டியிட்டனர்.
இந்நிலையில் 1,60,432 வாக்குகள் பெற்று அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் காலையில் இருந்தே டிராபிக் ராமசாமிக்கும், நோட்டாவிற்கும் கடும் போட்டி நிலவி வந்தது.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் டிராபிக் ராமசாமி 4,590 வாக்குகள் பெற்று 3 இடமும், நோட்டா 2,376 வாக்குகள் பெற்று 4ம் இடமும் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து நோட்டவை தோற்கடித்து 3வது இடத்தினை தக்க வைத்துக் கொண்டுள்ளார் டிராபிக் ராமசாமி!!!
-
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications