சுங்கச் சாவடி தகராறு: நாம்தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது

கடந்த 17ம் தேதி காரைக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பங்கேற்றார். அங்கிருந்து இரவு மதுரை திரும்பினார்.
மேலூர் அருகே சிட்டம்பட்டி அருகே சீமானில் கார் வந்த போது சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துமாறு கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிகிறது. சீமானும் அவருடைய ஆதரவாளர்களும் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் தகராறு செய்ததாக மேலூர் போலீசில் சுங்கச் சாவடி ஊழியர் அமீர் புகார் தெரிவித்தார்.
மேலூர் டிஎஸ்.பி மணிரத்னம் தலைமையில் இன்று சென்னை வந்த போலீசார் ஆலப்பாக்கத்தில் உள்ள சீமான் வீட்டிற்குச் சென்றனர். அங்கு சீமான் வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் போராட்டத்திற்கு ஆயத்தமாக கொண்டிருந்தார்.
அவரை கைது செய்த போலீஸ் வேனில் ஏற்ற முயன்ற போது அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனினும் போலீசார் சீமானை மதுரை கொண்டு சென்றனர். மதுரை நீதிமன்றத்தில் இன்று சீமான் ஆஜர் படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே சீமான் கைது பற்றி கருத்து கூறிய நாம் தமிழர் கட்சியினர். சுங்கச்சாவடி தகராறுக்கும் சீமானுக்கு தொடர்பில்லை. மோதல் ஏற்பட்டபோது இருதரப்பினரையும் சீமான் சமாதானம் செய்தார். பின்னர் சுங்கக்கட்டணம் எடுத்துக்கொண்டே பயணம் செய்தோம். இது உள்நோக்கத்துடன் போடப்பட்ட வழக்கு என்று குறிப்பிட்டுள்ளனர்.
சீமான் திடீர் என கைது செய்யப்பட்டுள்ளது அவரது ஆதரவாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications