சசிகலா அணிக்கு 112 வாக்குகள்தான்.. மக்கள் வாக்குகள் நமக்கே.. நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பி.எஸ் உரை
122 வாக்குகள் மட்டுமே சசிகலா அணிக்கு. மக்கள் வாக்குகள் அனைத்தும் நமது அணிக்கே என்று பேசினார் பன்னீர்செல்வம், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்யாத தொழிலே இல்லை என்றும் சிரித்தபடி கூறினார்.
சென்னை: அதிமுகவில் தனக்கு ஆதரவாக உள்ள நிர்வாகிகளுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நேற்று காஞ்சிபுரம் நிர்வாகிகளுடன் ஆலோசித்த ஓ.பன்னீர்செல்வம், இன்று சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், நான் முதல்வராக இருந்தபோது பெரும் சேதம் விளைவித்த வர்தா புயல் சேதங்களை 3 நாட்களில் சீரமைத்தேன். வர்தா புயல் மீட்பு நடவடிக்கைக்காக பத்திரிகைகள் என்னை பாராட்டின. இதை பார்த்து அவர்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என அமைச்சர்கள் பேட்டியளித்தனர். அமைச்சர்களே முதல்வருக்கு எதிராக பேட்டியளித்தால் ஆளுநர், ஆட்சியை கலைத்துவிடுவாரே என்று சசிகலாவிடம் நான் தெரிவித்தேன். அவரும் அமைச்சர்களை கண்டிப்பதாக கூறினார். ஆனால் மேலும் பல அமைச்சர்கள் சசிகலாவை முதல்வராக்க கோரினர் என்று புகார் தெரிவித்தார் பன்னீர்செல்வம்.
122 வாக்குகள் மட்டுமே சசிகலா அணிக்கு. மக்கள் வாக்குகள் அனைத்தும் நமது அணிக்கே என்று பேசிய பன்னீர்செல்வம், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஒரு ஆல் ரவுண்டர் என்றும் அவர் செய்யாத தொழிலே இல்லை என்றும் சிரித்தபடி கூறினார்.
அண்ட புழுகு செங்கோட்டையன். ஆகாச புழுகு திண்டுக்கல் சீனிவாசன் என்றும் அமைச்சர்களை வர்ணித்தார் பன்னீர்செல்வம்.












Click it and Unblock the Notifications