ஓ.பி.எஸ். தம்பியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
மதுரை: தலித் பூசாரி தற்கொலை விவகாரத்தில் சிக்கி நகராட்சித் தலைவர் பதவியை இழந்து கைதாகும் அபாய நிலையில் உள்ள தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலித் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் சிக்கியுள்ளார் ராஜா. இவர் பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்து வந்தார். நாகமுத்து தற்கொலை வழக்கி்ல் சிக்கி பதவியை இழந்தார். இவரது வீட்டில் போலீஸ் ரெய்டு நடந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர் முன்ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அவர் மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில், பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் நீதிமன்றத்தில் என் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கலாகி உள்ளது. கீழ் கோர்ட்டில் நான் சரண் அடையும் நாளிலேயே ஜாமீன் மனுவையும் பரிசீலிக்க வேண்டும். சரண் அடையும் நாளில் ஜாமீன் மனு குறித்து பரிசீலிக்க கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் ராஜா.
கோவில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் தற்போது வன்கொடுமை தடுப்பு பிரிவு சேர்க்கப்பட்டு இருப்பதால், அதற்காக தான் கீழ்கோர்ட்டில் சரண் அடைந்து, ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யும்போது, அன்றைய தினமே தனது மனுவை பரிசீலித்து ஜாமீன் வழங்க உத்தரவிடக்கோரியுள்ளார் ஓ.ராஜா.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.ராஜா சார்பில் வக்கீல் காந்தி ஆஜரானார். அவர் நீதிபதி முன்பு ஆஜராகி வாதிடுகையில், பூசாரி தற்கொலை வழக்கில் 2012ம் ஆண்டே ஓ.ராஜா உள்ளிட்டோர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். தற்போது இந்த வழக்கில் புதிதாக வன்கொடுமை தடுப்பு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதால், தற்போது ஜாமீன் கேட்டு மனு செய்யப்பட்டுள்ளதாக காந்தி தெரிவித்தார்.
ஆனால் ஜாமீன் வழங்க புகார்தாரர் சுப்புராஜ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ரத்தினம், அழகுமணி ஆகியோர், ஓ.ராஜா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து, மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் கோரினர். இதை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications