ஓ.பி.எஸ். தம்பியின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
மதுரை: தலித் பூசாரி தற்கொலை விவகாரத்தில் சிக்கி நகராட்சித் தலைவர் பதவியை இழந்து கைதாகும் அபாய நிலையில் உள்ள தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஜாமீன் தொடர்பான மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலித் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் சிக்கியுள்ளார் ராஜா. இவர் பெரியகுளம் நகராட்சித் தலைவராக இருந்து வந்தார். நாகமுத்து தற்கொலை வழக்கி்ல் சிக்கி பதவியை இழந்தார். இவரது வீட்டில் போலீஸ் ரெய்டு நடந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர் முன்ஜாமீன் பெற்று வெளியே உள்ளார்.

இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் அவர் மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அதில், பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் நீதிமன்றத்தில் என் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கலாகி உள்ளது. கீழ் கோர்ட்டில் நான் சரண் அடையும் நாளிலேயே ஜாமீன் மனுவையும் பரிசீலிக்க வேண்டும். சரண் அடையும் நாளில் ஜாமீன் மனு குறித்து பரிசீலிக்க கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார் ராஜா.
கோவில் பூசாரி நாகமுத்து தற்கொலை வழக்கில் தற்போது வன்கொடுமை தடுப்பு பிரிவு சேர்க்கப்பட்டு இருப்பதால், அதற்காக தான் கீழ்கோர்ட்டில் சரண் அடைந்து, ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யும்போது, அன்றைய தினமே தனது மனுவை பரிசீலித்து ஜாமீன் வழங்க உத்தரவிடக்கோரியுள்ளார் ஓ.ராஜா.
இந்த மனு நீதிபதி எம்.எம்.சுந்தரேஸ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.ராஜா சார்பில் வக்கீல் காந்தி ஆஜரானார். அவர் நீதிபதி முன்பு ஆஜராகி வாதிடுகையில், பூசாரி தற்கொலை வழக்கில் 2012ம் ஆண்டே ஓ.ராஜா உள்ளிட்டோர் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். தற்போது இந்த வழக்கில் புதிதாக வன்கொடுமை தடுப்பு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதால், தற்போது ஜாமீன் கேட்டு மனு செய்யப்பட்டுள்ளதாக காந்தி தெரிவித்தார்.
ஆனால் ஜாமீன் வழங்க புகார்தாரர் சுப்புராஜ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ரத்தினம், அழகுமணி ஆகியோர், ஓ.ராஜா ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து, மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் கோரினர். இதை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை ஜூன் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications