ஜெ.வுக்காக மீட்புப் பணிகளை நிறுத்தி விட்டு ரோடு போடும் வேலையில் இறங்கிய அதிகாரிகள்!
சென்னை: சென்னை போரூர் 11 அடுக்குமாடிக் குடியிருப்பு சம்பவத்தில் இடிபாடுகளை அகற்றி நடந்து வரும் மீட்புப் பணிகளை நேற்று முதல்வர் ஜெயலலிதா வருகிறார் என்பதற்காக சில மணி நேரம் நிறுத்தி வைத்து விட்டனர்.
இந்தப் பணியை நிறுத்தி விட்டு முதல்வர் வசதியாக வந்து செல்வதற்காக வீடு கட்ட வைத்திருந்த மணலைக் கொட்டி தற்காலிகமாக சாலை அமைத்தல், முதல்வர் வரும் பாதையை சீர்படுத்துதல் என்று ரோடு போடும் வேலையில் இறங்கி விட்டனர் அதிகாரிகள்.
இதன் காரணமாக மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டன. இடையில் மழையும் வந்ததால் இன்னும் தாமதமானது.

மீட்புப் பணி என்றால் என்ன…
ஒரு விபத்து, பேரிடர் என்றால் மீட்புப் பணிதான் அதி முக்கியமானது. ஒரு நிமிடம் தாமதமாக போனால் கூட ஒரு உயிரைக் காப்பாற்ற முடியாமல் போய் விடும் என்பதால் ஒவ்வொரு விநாடியும் முக்கியமானது. எனவேதான் மீட்புப் பணிகளில் அதி வேகம் காட்டுவார்கள்.

ஆனால் இங்கு..
ஆனால் நேற்று சென்னை போரூர் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த விவகாரத்தில் நேற்று மிக வித்தியாசமான காட்சியைக் காண முடிந்தது.

முதல்வர் வருகையால்
முதல்வர் ஜெயலலிதா நேற்று விபத்து நடந்த இடத்திற்கு வருகை தந்தார். நேரில் பார்வையிட்டார்.

மீட்புப் பணிகள் நிறுத்தம்
முதல்வர் வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும் போலீஸாரும் அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்தில் குவிந்தனர். அந்த இடத்தை சரி செய்யும் வேலையில் இறங்கினர்.

மீட்புப் பணி பணியாளர்களை வைத்து
இதற்கு அந்த மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களைக் கொண்டே முதல்வருக்காக சில வசதிகளை ஏற்படுத்தும் வேலையில் இறங்கினர்.

தற்காலிக சாலை
முதலில் அந்த இடத்தில் கொட்டி வைக்கப்பட்டிருந்த வீடு கட்டப் பயன்படுத்தப்படும் மணலைக் கொட்டி தற்காலிக சாலை போல போடப்பட்டது. பின்னர் அந்தப் பகுதியில் இருந்த மேடு பள்ளங்களை அகற்றி சரி செய்து சீரமைத்தனர்.












Click it and Unblock the Notifications