முதியவர்கள் கொலை விவகாரம்: மீண்டும் காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் கோட்டாச்சியர் தலைமையில் ஆய்வு
காஞ்சிபுரம்: பாலேஸ்வரத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கருணை இல்லத்தில் முதியவர்களைக் கொன்று அவர்களின் எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக வந்துள்ள புகாரை அடுத்து கோட்டாச்சியர் தலைமையில் 10 அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் ஜோசப் கருணை இல்லத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் முதியவர்களைக் கொன்று அவர்களின் உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த முதியோர் இல்லத்தில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் கடந்த மே மாதத்தில் இருந்து அந்த காப்பகம் உரிய ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், முறையான விளக்கம் கேட்டு காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இதுகுறித்து காப்பக நிர்வாகத்திடம் இருந்து எந்த முறையான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அங்குள்ள 320 முதியவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாவட்ட கோட்டாச்சியர் ராஜூ தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழு காப்பகத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
இன்றைய விசாரணை முடிந்த பிறகு, இதுகுறித்து நடவடிக்கை குறித்து விரிவான விபரங்கள் தெரியவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications