முதியவர்கள் கொலை விவகாரம்: மீண்டும் காஞ்சிபுரம் கருணை இல்லத்தில் கோட்டாச்சியர் தலைமையில் ஆய்வு
காஞ்சிபுரம்: பாலேஸ்வரத்தில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கருணை இல்லத்தில் முதியவர்களைக் கொன்று அவர்களின் எலும்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக வந்துள்ள புகாரை அடுத்து கோட்டாச்சியர் தலைமையில் 10 அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலேஸ்வரத்தில் செயல்பட்டு வரும் ஜோசப் கருணை இல்லத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் முதியவர்களைக் கொன்று அவர்களின் உடல் பதப்படுத்தப்பட்டு எலும்புகளை எடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது.

இதனையடுத்து மாவட்ட ஆட்சியர், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த முதியோர் இல்லத்தில் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் கடந்த மே மாதத்தில் இருந்து அந்த காப்பகம் உரிய ஆவணங்கள் இல்லாமல் செயல்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், முறையான விளக்கம் கேட்டு காப்பக நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், இதுகுறித்து காப்பக நிர்வாகத்திடம் இருந்து எந்த முறையான விளக்கமும் அளிக்கப்படவில்லை.
அங்குள்ள 320 முதியவர்களை வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று மாவட்ட கோட்டாச்சியர் ராஜூ தலைமையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொண்ட குழு காப்பகத்தில் விசாரணை நடத்தி வருகிறது.
இன்றைய விசாரணை முடிந்த பிறகு, இதுகுறித்து நடவடிக்கை குறித்து விரிவான விபரங்கள் தெரியவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications