விழுப்புரம் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து:இருவர் பலி- 15 படுகாயம்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தனியார் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 வயது குழந்தை உட்பட இரண்டு பேர் பலியாகியுள்ளனர். 15க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
புதுச்சேரியிலிருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து ஒன்று இன்று காலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே வந்த போது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பேருந்து விபத்துக்குள்ளானதை கண்ட பொதுமக்கள் படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனர். இதில் 4வயது பெண் குழந்தை ஜீவிதா, செஞ்சி அரசு மருத்துவமனையிலும் ஜெகநாதன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர்.
ஏரளமானோர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications