தொடர் விடுமுறை... ஆம்னி பஸ்களில் "கொள்ளையோ..கொள்ளை".... பதறும் பயணிகள்...

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறையை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் விடப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகளிடம் பல மடங்கு கட்டணத்தை ஆம்னி பஸ்கள் வசூலித்து வருவதால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாகினர்.

தமிழகத்தில் நவராத்திரி விழாவின் 9வது நாளில் ஆயுத பூஜையும், 10வது நாளில் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. இதனால் தொடர்ச்சியாக சனி, ஞாயிறுடன் சேர்த்து 5 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.

Omni Bus

தொடர் விடுமுறையால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் பணிபுரிவோர் இன்றே சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பஸ், ரயில்களில் இடம் கிடைக்காதவர்கள் ஆம்னி பஸ்களைத்தான் நாடுவது வழக்கம். இந்த வாய்ப்பைத்தான் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் விட்டுவிடுவார்களா?

வழக்கத்தைவிட 2 மடங்கு, 3 மடங்கு கட்டணத்தை உயர்த்தி பயணிகளை பதைபதைக்க வைத்து வருகின்றனர்.

சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று இரவு ரூ1,000, ரூ1,200 என கேட்கிற கொடுமையும் நடக்கிறது. திருச்சிக்கே இந்த கட்டணம் என்றால் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரிக்கான கட்டணங்கள் ரூ2,000, ரூ2,500 என ப்ளைட் டிக்கெட் ரேஞ்சுக்கு எகத்தாளம் பேசுவதையும் நாம் கேட்க முடிந்தது.

இந்த கொள்ளைக் கட்டணத்தையும் கொடுத்துவிட்டு ஊர் போய்சேர்ந்தால் போதும் என்ற கூட்டம் அலைமோதுகிறது.

ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பஸ்களின் கட்டண கொள்ளையை ஊடகங்கள் வெளிப்படுத்தினாலும் அரசு முறைப்படுத்துவது எப்போது என்பதுதான் தெரியவில்லை!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+