கடந்த வாரம் வெள்ளிக்கிழமையும், மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து.. வெளியான புது தகவல்
Recommended Video

மதுரை: கடந்த வெள்ளிக்கிழமையும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்ட தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
நேற்று நள்ளிரவில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் தீ விபத்து ஏற்பட்டதில் 30க்கும் மேற்பட்ட கடைகள் தீக்கிரையாகியுள்ளன. கோயில் கோபுரத்தில் இருந்த புறாக்கள் கருகின. கட்டிடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து அபசகுணமாக ஜோதிடர்களால் எச்சரிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இதேபோல ஒரு தீ விபத்து மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் ஏற்பட்டதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.
கோயில் வளாகத்திலுள்ள மடப்பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அங்கிருந்தோரே அதை அணைத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவையெல்லாம் அபசகுண அறிகுறிகள் என ஜோதிடர்கள் எச்சரிக்கிறார்கள். பரிகார பூஜைகள் செய்ய இந்து அமைப்புகள் கோரிக்கைவிடுத்து வருகின்றன.












Click it and Unblock the Notifications