ஓணம் பண்டிகை: கோவை மாவட்டத்திற்கு வரும் 14ம் தேதி உள்ளூர் விடுமுறை
Subscribe to Oneindia Tamil
கோவை: ஓணம் பண்டிகையையொட்டி வரும் 14 ஆம் தேதி கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 14ம் தேதிக்கு பதில் 17ம் தேதி வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவிட்டார்.
எதிர்வரும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு 14.9.2016 புதன்கிழமை அன்று ஒருநாள் மட்டும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு சிறப்பு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 17.9.2016 சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்ட நாளில் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலகங்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications