சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பு- விமான நிலையத்தில் ஒருவரிடம் விசாரணை!
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பாக விமான நிலையத்தில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
சென்னையில் இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி சிக்கியிருந்தான். அவனுக்கு இலங்கைக்கான பாகிஸ்தான் தூதரே அவனுக்கு உதவி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
அத்துடன் சென்னை, பெங்களூர் நகரங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவும் தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் சென்ட்ரல் ரயில் இன்று இரட்டை குண்டுவெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. மேலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்குரிய ஒருநபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆனால் விசாரணைக்குப் பின்னர் அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் சந்தேக நபர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இலங்கைக்கு செல்வதற்காக காத்திருந்த அந்த பயணியிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications