தமிழகத்தை குலைநடுங்க வைத்த பல்லடம் 4 பேர் படுகொலை- முக்கிய குற்றவாளிகளில் 4-வது கொலையாளி கைது
பல்லடம்: தமிழகத்தை குலைநடுங்க வைத்த பல்லடம் 4 பேர் படுகொலை சம்பவத்தில் 4-வது முக்கிய கொலையாளியான வெங்கடேசன் என்ற ராஜ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளகிணறு குறைதோட்டம் பகுதியில் ஒரே குடும்பத்தினர் 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். மோகன்ராஜ், அவரது தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டவர்கள்.

இந்த சம்பவத்துக்கு வெவ்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. மது குடிப்பதில் தகராறு, ஹோட்டல் நடத்துவதில் பிரச்சனை, ஹோட்டல் கடன் பாக்கி என ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு காரணத்தை கூறி வருகிறது.
இவ்வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப்படைகளை போலீசார் அமைத்தனர். இந்த படுகொலையில் தொடர்புடைய செல்லமுத்து முதலில் சிக்கினார். அவர் தப்பி ஓடும் போது கை, காலில் முறிவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து வெங்கடேஷ், சோனை முத்தையா இருவரும் திருப்பூர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து தற்போது வெங்கடேஷின் தந்தை ஐயப்பன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications