கொடநாடு கொலை வழக்கு - மேலும் ஒருவர் கைது

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

கோத்தகிரி: கொடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய குட்டி என்ற ஜிஜின் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடநாடு எஸ்டேட்டில் கடந்த மாதம் 24ம் தேதி காவலாளி கொலை செய்யப்பட்டு கொள்ளையும் நடத்தப்பட்டது. இதில் தொடர்புடைய நபர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

One more held in Kodanad murder and robbery case

கேரளாவில் தலைமறைவாக இருந்த குட்டி என்ற ஜிஜின் கோத்தகிரி போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஜிஜினை பிடிக்க கோத்தகிரி போலீசார் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கேரளாவில் முகாமிட்டிருந்தனர். இன்னொரு தனிப்பிரிவு போலீசார் வட மாநிலங்களில் பதுங்கியுள்ள கொடநாடு குற்றச் சம்பவங்களின் முக்கிய குற்றவாளியை பிடிக்க சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+