வேகமாய் பரவுகிறது பன்றிக் காய்ச்சல்.. திருவண்ணாமலையில் நகராட்சி பெண் ஊழியர் பலி.. மக்கள் பீதி
தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாய் பரவி வருகிறது. இந்நோய்க்கு திருவண்ணாமலையைச் சேர்ந்த நகராட்சி பெண் ஊழியர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார்.
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நகராட்சி பெண் ஊழியர் ஒருவர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தார். பன்றிக் காய்ச்சலுக்கு அடுத்து உயிர் பலியாகி வருவதைக் கண்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்த பிரேமலதா. இவருக்கு 10 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்துள்ளது. கடும் அவதிக்கு உள்ளான பிரேமலதா திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரேமலதா உயிரிழந்தார். அவரின் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
பரவும் பன்றிக் காய்ச்சல்
இதே போன்று கோவையில் உள்ள ஒரு குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டது. இந்தக் காய்ச்சாலால் அவதிப்பட்ட தாய், தந்தை இருவரும் உயிரிழந்த நிலையில் அவர்களது மகன் மற்றும் மகளுக்கும் பன்றிக் காய்ச்சல் தொற்று உருவாகியுள்ளது. அவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடரும் பலிகள்
கோவை மதுக்கரை அருகேயுள்ள மச்சகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தண்டபானியும் அவரது மனைவி மல்லிகாவும் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல், அவர்கள் இருவரும் இரண்டு நாட்களுக்கு முன்னர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
அவதி
உயிரிழந்த இவர்களின் மகன் சந்தானகிருஷ்ணன் மற்றும் மகள் மரகதம் ஆகியோருக்கும் பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அச்சம்
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் தற்போது பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எச்சரிக்கை
சளி அதிகமாக இருத்தல், மூச்சு விட சிரமப்படுதல், தொடர் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல சுகாதாரத் துறை கூறியுள்ளது. இருந்தாலும், பலர் உயிரிழந்து வருவதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications