ரஜினி அரசியலுக்கு வர வேண்டாமே: சொல்கிறார்கள் ஒன்இந்தியா வாசகர்கள்
பெங்களூர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாம் என்று ஒன்இந்தியா இணையதள வாசகர்கள் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்பொழுது அரசியலுக்கு வருவார் என்ற கேள்வி பல ஆண்டுகளாக கேட்கப்பட்டு வந்தது. அவரும் கட்சி எல்லாம் இப்ப நமக்கு எதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு என்று கூறி வந்தார்.
இந்நிலையில் தான் ரஜினி புதிய கட்சியை துவங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

வாக்கெடுப்பு
ரஜினி அரசியல் கட்சியை துவங்குவதாக அறிவித்ததையடுத்து ஒன்இந்தியா இணையதளத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

சபாஷ்
ரஜினி தனிக்கட்சி துவங்குவது சபாஷ்! சரியான முடிவு என்று 7 ஆயிரத்து 478 வாசகர்கள் வாக்களித்தனர்.

ரொம்பவே லேட்
ரஜினி புதிய கட்சியை துவங்கும் முடிவு மிகவும் காலதாமதமாக எடுக்கப்பட்டது என்று 7 ஆயிரத்து 852 பேர் தெரிவித்துள்ளனர்.

கூட்டணி
வலுவான கூட்டணி அமைந்தால் மட்டுமே ரஜினியால் வெற்றி பெற முடியும் என்று 3 ஆயிரத்து 278 பேர் தெரிவித்துள்ளனர்.

வர வேண்டாமே
ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டாமே என்று 18 ஆயிரத்து 157 பேர் வாக்களித்துள்ளனர்.











Click it and Unblock the Notifications