எடப்பாடிக்கு ஆளுநர் அழைப்பு.. ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ். அவசர ஆலோசனை
சென்னை: தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ், எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளதால் ஏற்பட்டுள்ள புதிய சூழலைத் தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் திடீரென எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து கூவத்தூரிலிருந்து கிளம்பி விட்டார் எடப்பாடி பழனிச்சாமி. அவருக்கு ஆளுநர் அரசமைக்க அழைப்பு விடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாக வலுத்து வருகிறது.
இந்த புதிய சூழலைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அவசரமாக தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் குதித்துள்ளார். முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார். அவர் ஆளுநரை சந்திக்கச் செல்வாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இருப்பினும் அதற்கான வாய்ப்பு குறைவுதான்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்கள முதல்வர் சந்திக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.