அதிமுக லெட்டர் பேர்டில் மோடிக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் சசிகலா தரப்பு!

சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை ஒட்டி, பிரதமர் மோடிக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேர்டில் இருந்து மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது சசிகலா தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உத்தரப்பிரதேசம், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

OPS greet PM Modi for BJP victory in UP assembly election

இதையடுத்து பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ''பாஜகவின் தற்போதைய வெற்றிக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலமாக, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது,'' என்று கூறியுள்ளார்.

இதுஒரு புறம் இருக்க, இந்த வாழ்த்துச் செய்தியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் இருந்து அனுப்பியுள்ளார் ஓபிஎஸ். இது சசிகலா தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஏற்கனவே, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுவிட்டதாக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்திருக்கிறார். ஆனால், சசிகலாவின் உத்தரவு செல்லாது என்று ஓபிஎஸ் அணியினர் கூறிவருகின்றனர். இந்தநிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேர்டில் வாழ்த்து தெரிவித்த விவகாரம் சசிகலா தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+