அதிமுக லெட்டர் பேர்டில் மோடிக்கு வாழ்த்து சொன்ன ஓபிஎஸ்.. அதிர்ச்சியில் சசிகலா தரப்பு!
சட்டசபை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளதை ஒட்டி, பிரதமர் மோடிக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேர்டில் இருந்து மோடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளது சசிகலா தரப்பை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரப்பிரதேசம், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. இதில், நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றுள்ள பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

இதையடுத்து பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு, தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ''பாஜகவின் தற்போதைய வெற்றிக்கு எனது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றியின் மூலமாக, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு புதிய சகாப்தம் படைக்கப்பட்டுள்ளது,'' என்று கூறியுள்ளார்.
இதுஒரு புறம் இருக்க, இந்த வாழ்த்துச் செய்தியை அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேடில் இருந்து அனுப்பியுள்ளார் ஓபிஎஸ். இது சசிகலா தரப்பை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்கனவே, அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டுவிட்டதாக பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்திருக்கிறார். ஆனால், சசிகலாவின் உத்தரவு செல்லாது என்று ஓபிஎஸ் அணியினர் கூறிவருகின்றனர். இந்தநிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ லெட்டர் பேர்டில் வாழ்த்து தெரிவித்த விவகாரம் சசிகலா தரப்பில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications