வீரத் திருமகள்.. வெற்றித் திருமகள்.. புரட்சி பூபாளம்.. புதுமைப் பெட்டகம்.. ஓ.பி.எஸ். பேச்சு!
சென்னை: அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற அதிமுக தலைவராக ஜெயலலிதாவைத் தேர்வு செய்யும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதாவை வெகுவாகப் புகழ்ந்து பேசினார்.
ஓ.பன்னீர் செல்வம் பேசுகையில், கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் மாண்புமிகு இதயதெய்வம், புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆணையை ஏற்று சட்டமன்ற கட்சித் தலைவர் பதவியையும், முதல்வர் பதவியையும் ராஜினாமா செயகிறேன்.

சூதுமதியாளர்களின் சூழ்ச்சி வலையை கிழித்தெறிந்து, நியாயத்தை வென்ற வீரத் தமிழ் மகள், வெற்றித் திருமகள், தர்மத்தின் தலைமகள், நம் அம்மா.

தமிழ்த்தாய் தவம் இருந்து பெற்ற தத்துவக் களஞ்சியம், தமிழ்நாட்டின் எதிர்காலம், தமிழ் மக்களின் தளரா நம்பிக்கை, தீய சக்திகள் அனைத்தும் புனைந்துபட்ட பொய் வழக்குகளை பொடிப் பொடியாக தகர்த்து, நீதியென்னும் வேள்வியில், புடம் போட்ட தங்கம், புரட்சி பூபாளம், புதுமைப் பெட்டகம் நம் அம்மா.
அதிமுக கழக சட்டமன்ற கட்சியின் தலைவராக அம்மா அவர்களைத் தேர்வு செய்து தருமாறு முன்மொழிகிறேன் என்று தீர்மானத்தின்போது பேசினார் ஓ.பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications