முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் தற்கொலைக்கு முயன்றிருப்பார்.. தினகரன் 'திடுக்'
முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் தற்கொலைக்கு முயன்றிருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை: முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் ஓபிஎஸ் தற்கொலைக்கு முயன்றிருப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்ததாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் டிடிவி தினகரன் இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்தார்.

அழிக்க நினைக்கிறார்
அதாவது பாஜகவும் பிரதமர் மோடியும் தான் அதிமுக பிளவுக்கு காரணம் என அவர் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் மோடி அதிமுகவை அழிக்க நினைப்பதாகவும் தினகரன் தெரிவித்துள்ளார்.

குருமூர்த்தி மூலம்..
சசிகலாவை முதல்வராக்க முன்மொழிந்தவர் இதே ஓ.பன்னீர்செல்வம் தான் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார். குருமூர்த்தி மூலம் பன்னீர்செல்வத்தை சசிலாகவுக்கு எதிராக பா.ஜ.க.தான் தூண்டிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

சின்னம் எப்படி கிடைத்தது?
ஓ.பன்னீர்செல்வத்தின் படிப்படியான உயர்வுக்கு சசிகலா தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் எடப்பாடி அணிக்கு எப்படி கிடைத்தது என்று இப்போது புரிகிறதா? என்றும் தினகரன் கேள்வி எழுப்பினார்.

மோடி அதிமுக பொது செயலாளரா?
பா.ஜ.க.வின் முதல் ஏஜெண்ட் பன்னீர்செல்வம், இரண்டாவது ஏஜெண்ட் எடப்பாடி பழனிச்சாமி என்றும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் பிரதமர் மோடியா என்றும் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தர்மயுத்தத்தை தூண்டியது பாஜக
மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர் என்றும் அவர் கூறினார். அமைச்சர்களை சேர்த்து கொண்டால் மக்கள் எங்களை மன்னிக்க மாட்டார்கள் என்றும் பாஜகவின் தூண்டுதலால், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை துவங்கினார் என டிடிவி.தினகரன் தெரிவித்தார்.

பதவி கிடைக்காத விரக்தியில்
மேலும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தங்கள் குடும்பத்தினர் எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியின் காரணத்தால் தான் ஓ.பன்னீர்செல்வம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருப்பார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications