வர்தா பாதிப்பு: மோடியுடன் நாளை ஓபிஎஸ் சந்திப்பு- தலைமைச் செயலகத்தில் மும்முர ஆலோசனை!
சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோருடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் நாளை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வர்தா புயல் ஏற்படுத்திய சேதங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு வல்லுநர் குழுவை அனுப்ப வேண்டும் என் கோரிக்கை வைக்க உள்ளார்.
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோருடன் இன்று முதல்வர் பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.

வங்க கடலில் உருவான வர்தா புயல் கடந்த 12ம் தேதி சென்னையில் கரையைக் கடந்தது. இந்த புயல் சென்னையை மட்டுமல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதத்தை உண்டாக்கியது. இதில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் சாலை போக்குவரத்து தடைபட்டது. மின்சார இணைப்பும், தொலைதொடர்பும் கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்பட்டுள்ளது. குப்பைகள் அகற்றப்படாமல் நோய் தொற்று ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. பொது மக்கள் பாதிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க பல ஆயிரம் கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக தொழில் அமைப்புகள் கணித்தன.
இந்தநிலையில் தமிழகத்துக்கு நிவாரண உதவியாக ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு முதற்கட்டமாக அளிக்க வேண்டும் என்றும், புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிடுவதற்கு மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதல்வர் ஓபிஎஸ் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். மேலும், முதற்கட்டமாக தமிழக அரசு சார்பில் ரூ.500 கோடியை புயல் நிவாரணத்துக்காக விடுவித்தும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
தற்போது ஏற்பட்டுள்ள வர்தா புயல் சேதம் தொடர்பான அறிக்கையை தமிழக அரசு தயாரித்து வருகிறது. இந்த அறிக்கையை டெல்லி சென்று பிரதமரிடம் கொடுப்பதற்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து உள்ளார்.
டெல்லி செல்ல உள்ளது தொடர்பாக ஞாயிறு கிழமையான இன்று தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளர் ஆகியோருடன் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார். அதில் பிரதமரிடம் அளிக்கப்பட உள்ள மனு தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர்












Click it and Unblock the Notifications