தமிழக அரசைக் கண்டித்து.. 10ம் தேதி போராட்டம் நடத்த ஓபிஎஸ்ஸுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
தமிழக அரசைக் கண்டித்து வரும் 10ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக ஓபிஎஸ் அறிவித்தார். இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
சென்னை: எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்து வரும் 10ம் தேதி போராட்டம் நடத்த போலீசார் ஓபிஎஸ்ஸுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதனால் 18ம் தேதிக்குப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியினர், எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்து வரும் 10ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். நீட் தேர்வு, குடிநீர் பிரச்சனை, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட மக்கள் பிரச்சனையை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்ற அறிவிக்கப்பட்டது.

முதல் கட்டமாக சென்னையில் வருகிற 10-ந்தேதி தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வரும் 18ம் தேதிக்குப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணி பிரிந்ததில் இருந்து, நேரடியாக எடப்பாடி பழனிச்சாமியின் அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications