எம்எல்ஏ விடுதி தீவிர கண்காணிப்பு: ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்குவதற்கு தடைவிதித்தது மன்னார்குடி கோஷ்டி
சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. விடுதியை சுற்றி 250 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை அரசினர் தோட்டத்தில் எம்எல்ஏ விடுதி உள்ளது. இங்கு எம்எல்ஏக்கள் தங்களின் ஆதரவாளர்களுடன் தங்குவது வழக்கம். முன்னாள் எம்எல்ஏக்கள் சென்னை வந்தாலும் அவர்கள் எம்எல்ஏ விடுதியில்தான் தங்குவர்.

இந்நிலையில் .ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்புக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். சசிகலா முதல்வராகவும் அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
மக்கள் விரும்பினால் ராஜினாமா கடிதத்தை திரும்பப்பெறுவேன் இன்றும் அவர் கூறியுள்ளார். அவருக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் என பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அதிமுகவை சேர்ந்த ஒரு சில எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதனை தடுக்கும் வகையில் எம்எல்ஏ விடுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.எம்எல்ஏ விடுதியைச் சுற்றி 250 போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications