செய்யாறு அதிமுக எம்.எல்.ஏவை தாக்க முயற்சி… சசிகலா- ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பயங்கர மோதல்
சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளித்து வாக்களித்துவிட்டு ஊர் திரும்பிய செய்யாறு அதிமுக எம்எல்ஏவை தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவம் செய்யாறில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்யாறு: கடந்த 18ம் தேதி சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களித்துவிட்டு ஊர் திரும்பினார் செய்யாறு எம்எல்ஏ மோகன். அவருக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு சிறையில் இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆதரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 18ம் தேதி சட்டசபையில் நம்பிக்கை வாக்கெப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு அதிமுகவின் 122 எம்எல்ஏக்கள் வாக்களித்து எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக உறுதி படுத்தினார்கள்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்கள் மீது தொகுதி மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் யாரும் ஊருக்குள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் செய்யாறு எம்எல்ஏ மோகன் தனது சொந்த தொகுதிக்கு திரும்பினார்.
எம்எல்ஏ ஊர் திரும்பிவிட்டதை தெரிந்து கொண்ட மக்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்று எம்எல்ஏவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அங்கு வந்த ஓபிஎஸ் ஆதரவாளர்களும் எம்எல்ஏவை எதிர்த்து குரல் எழுப்பினார்கள். இதனை கடுமையாக சசிகலா ஆதரவாளர்கள் எதிர்த்தனர். இதனால் சசிகலா ஆதரவாளர்களுக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிதடி என கைகலப்பு ஏற்பட்டது.
இந்த மோதலின் போது செய்யாறு எம்எல்ஏ மோகனை தாக்க ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முயற்சி செய்தனர். இதனால் செய்யாறு பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications