வர்லாம்... வர்லாம் வா... சசி அணியை தெறிக்க விட்ட ஓபிஎஸ் அணி டாக்டர்
ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு உண்ணாவிரதம் இருந்த ஓபிஎஸ் அணியில் பேசிய டாக்டர் அழகு தமிழ் செல்வி, சசிகலா அணியை தெறிக்க விட்டார்.
சென்னை: ஓபிஎஸ் பாசத்துக்கு முன்னாடி பனி... பகைக்கு முன்னாடி புலி என்று தொடங்கி... வரலாம் வர்லாம் வா என்றும் தெறிக்க விடலாமா என்று கேட்டு சசிகலா அணியை தனது பேச்சால் தெறிக்க விட்டார் டாக்டர் அழகு தமிழ் செல்வி.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது மரணத்திற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள், அதிமுக தொண்டர்கள் மார்ச் 8 ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் பலரும் பங்கேற்று பேசினர். திரைப்பட நகைச்சுவை நடிகர் ஐசரி வேலனின் மகள் அழகு தமிழ் செல்வி தற்போது ஓபிஎஸ் அணியில் உள்ளார். நேற்றைய போராட்டத்தில் பேசிய அவர், விஜய், அஜீத் நடித்த திரைப்பட வசனங்களை பேசி சசிகலா அணிக்கு சவால் விட்டார்.
சசிகலாவை வெளுத்து வாங்கிய அழகு தமிழ் செல்வியின் பேச்சு.... சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications