For Daily Alerts
Just In
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வெற்றி.. மதுரையில் ஓபிஎஸ் அணியினர் வியூகம்
மதுரை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யார் யார் எந்தெந்த பூத்துகளில் வேலை பார்க்க வேண்டும் என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுரை தல்லாங்குளத்தில் ஓபிஎஸ் அணியினர் நிகழ்த்தினர்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் அதிமுகவின் இரு அணிகளும் மோதுகின்றன. மதுரையில் ஓபிஎஸ் அணியினர் தல்லாங்குளம் எம்.பி. அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.
இடைத்தேர்தலில் யார் யார் எந்தெந்த பகுதி பூத்துகளில் பணியாற்றுவது என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எம்எல்ஏக்கள் மாணிக்கம், சரவணன், முத்துராமலிங்கம், சாலைமுத்து, தேமுதிகவில் இருந்து அணி மாறியவர்கள் என அனைவரும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர்.
வரும் 27-ஆம் தேதி தேர்தல் பணிகளை நிகழ்த்துவதற்காக சென்னை புறப்படுவது என தீர்மானித்துள்ளனர்.
Comments
English summary
OPS team are assembling in Madurai to discuss about election duties in RK Nagar.
Story first published: Saturday, March 25, 2017, 18:12 [IST]