இதயத்திற்கு வலு சேர்க்கும் முந்திரி அல்வா...!
முந்திரி அல்வா சாப்பிட ஆசையா இருக்கா..? எங்க கிடைக்குனும்னு தெரியாதா அப்போ உங்களுக்காக தான் இருக்கு இந்த ஸ்வீட்கானா.காம். இந்த இணையதளத்தில் நீங்கள் விரும்பும் அனைத்து வகையான இனிப்பு மற்றும் கார வகைகள் நீங்கள் ஆர்டர் செய்த அடுத்த 24 மணிநேரத்தில் உங்கள் கைக்கு வந்து சேரும்.
இன்று நவராத்திரியின் நான்காவது நாள் சிறப்பா போகுதா..? இந்த சிறப்பான நவராத்திரியில் கடவுளுக்கு முந்திரி அல்வாவை நெய்வேத்தியம் செய்து வழிபடுங்கள்..! அம்மனின் பரிபூரண அருளை பெறுங்கள்..

இந்த முந்திரி அல்வாவை எவ்வாறு செய்வது என்று தெரியவில்லையா...? கவலை வேண்டாம் இங்கே அதற்கான செய்முறையை பார்ப்போம்..
இதற்க்கு தேவையான பொருட்கள் மிகவும் குறைவானவையே அத்துடன் இந்த அல்வாவை சுலபமாகவும், விரைவாகவும் செய்து முடிக்கலாம்.
1. முந்திரி பருப்பு : 1/2 கிலோ
2. சர்க்கரை : 1/2 கிலோ
3. நெய் : 1 ஸ்பூன்
4. ஏலக்காய் பவுடர் : 1 ஸ்பூன்
இப்போது இந்த சுவை மிக்க முந்திரி அல்வாவின் செய்முறையை பார்க்கலாம்.
1. முந்திரி பருப்பை 30 நிமிடம் பாலில் ஊற வைத்து வேக வைத்து அதனுடன் சர்க்கரையையும் இணைத்து கொள்ள வேண்டும்.
2. ஒரு நல்ல பேஸ்ட் பதத்திற்கு வரும்படி செய்யவும்.
3. ஒரு கெட்டி பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள முந்திரி பருப்பைஊற்றி சமைக்க வேண்டும்.
4. இப்பொழுது இதனுடன் நெய்யை இணைத்து கொள்ளவும்.
5. பின்பு ஏலக்காய் பௌடரை இணைத்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
6. ஒரு நல்ல பதத்திற்கு வந்ததும் நல்ல காற்றோட்டமாக எடுத்து வைத்துவிட வேண்டும்.
7. ஒரு 5 நிமிடம் கழித்து தட்டில் பரிமாறவும்.
தற்போது சுவைமிக்க முந்திரி அல்வா தயார்.
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்த முந்திரி அல்வாவை கொடுங்கள். அவர்கள் விரும்பி உண்பர். குழந்தைகளுக்கே பிடித்துவிட்டது என்றால், கண்டிப்பாக நீங்கள் அல்வாவை படைக்கப்போகும் கடவுளுக்கும் பிடிக்கும். அல்வா செய்ய கஷ்டமா இருக்கா..? கவலை வேண்டாம், நல்ல தரமான சுவையான அல்வாவை ஸ்வீட்கானா.காம்-ல் வாங்கி அம்மனுக்கு படைத்து அம்மனின் பரிபூரண அருளையும் ஆசியையும் பெற்று இன்புற்று வாழ்க..!












Click it and Unblock the Notifications