நாகர்கோவில் முந்திரி கொத்து..!!
தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறப்பு நிலை நகராட்சி நாகர்கோவில். இங்கே பல வகையான இனிப்பு பண்டங்கள் கிடைக்கும், அதில் ஒரு பிரசித்தி பெற்ற இனிப்பு பண்டம் தான் இந்த முந்திரி கொத்து. சாதரணமாக எந்த ஒரு இனிப்பு பண்டத்தையும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கொடுக்க கூடாது, ஆனால் இந்த முந்திரி கொத்தை சர்க்கரை வியாதி உள்ளவரும் உண்ணலாம்
முந்திரி கொத்து:
முந்திரி கொத்து எனப்படும் இந்த இனிப்பு வகை நவதானியங்கள் கொண்டு செய்யும் ஒரு இனிப்பு பண்டம். நவதானியங்கள் கொண்டு இந்த இனிப்பு பண்டத்தை செய்வதினால் இந்த இனிப்பு பண்டம் மிகவும் சக்திவாய்ந்தவை ஆகும். இதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
அது என்ன நாகர்கோவில் முந்திரி கொத்து? இந்த முந்திரி கொத்து, பல கடைகளில் கிடைக்கும், ஆனால் அவர்கள் அதை ஒரு வியாபார நோக்கத்துடன் தான் செய்கிறார்கள், ஆனால் இந்த நாகர்கோவிலில் மட்டும் தான் அதை ஒரு பாரம்பரிய கலையாக நிறுவி வருகின்றன.

நாகர்கோவில் முந்திரி கொத்து எப்படி செய்யவேண்டும் என்ன பார்க்கலாம்:
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1/2 கப்
அரிசிமாவு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
பயத்தம் பருப்பு - ஒரு கப்
வெல்லம் - ஒரு கப்
தேங்காய்துருவல் - அரை கப்
முந்திரிபருப்பு - கால் கப்
ஏலக்காய் - 6
சர்க்கரை - ஒரு தேக்கரண்டி
நெய் - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முற:
ஒரு அடி கனமான வாணலியில், பயத்தம் பருப்பை எடுத்து கொண்டு அதை பொன்னிறமாக வறுத்து கொள்ளவும். மற்றொரு வாணலியை எடுத்து கொண்டு அதில் சிறிதளவு நெய் ஊற்றி, முந்திரி, ஏலக்காய் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும். பிறகு அதில் தேங்காய் துருவலை சேர்த்து லேசாக வறுக்கவும்.
மிக்ஸியில் அரைப்பதற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால் ஏலக்காய், ஒரு தேக்கரண்டி சர்க்கரை, முந்திரி பருப்பு. இவை மூன்றையும் நன்றாக அரைக்க வேண்டும். அடுத்து நாம் வறுத்து வைத்திருக்கும் பயத்தம் பருப்பை நன்றாக பொடிக்கவும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைத்து, வடிகட்டி, கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும். பாகு கம்பி பதம் வந்தவுடன் அதே சூட்டில் இருக்கும் போதே அரைத்த மாவில் கொட்டி கட்டியில்லாமல் கிளறவும்.
அதில் தேங்காய் துருவல், முந்திரி, ஏலக்காய், இவை மூன்றையும் போட்டு நன்கு கிளறவும். கிளறி வைத்திருக்கும் மாவை சிறி சிறு உருண்டைகளாக பிடித்து தட்டில் வைக்கவும். அதன் பின் மேல் மாவிற்கு தேவையான மைதா மாவையும், அரிசி மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கட்டியிலாமல் கரைக்கவும்
அதன் பின்னர் கரைத்து வைத்திருக்கும் மாவில் உருண்டைகளை தோய்த்து எடுக்கவும். அதன் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி, மாவில் தோய்த்து எடுத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.
இதோ சுவையான முந்திரி கொத்து தயார் !!!
இந்த நாகர்கோவில் முந்திரி கொத்தை தயரிக்கவேண்டுமெனில், ஒரு தனி பதம் மற்றும் அந்த கலவை சரியாக வரும் வரை பொறுமையாக காத்திருக்கவேண்டும். ஆனால் இப்பொழுது இருக்கும் கால கட்டத்தில் அது முடியாது.
அதற்க்கு பொறுமை இல்லாமல் பல தரப்பட்ட மக்கள் பல கடைகளில் கிடைக்கும் தரமற்ற முந்திரி கொத்தை வாங்கி சாப்பிடுவார்கள். இதனால் உடல் நலத்திற்கு பல வகையான நோய்கள் வரும். அது மட்டும் அல்லாமல் கடைகளில் நாம் வாங்க கூடிய இந்த இனிப்பு பண்டத்தில் தரமற்ற பொருட்கள் தான் உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி முற்றிலுமாக செயல் இழந்து விடும்.
ஆனால் நம் உடல் நலத்தையும், ஆரோக்யத்தையும் கணக்கில் கொண்டு நமக்கு தரமான முறையில் இந்த நாகர்கோவில் முந்திரி கொத்தை தருவது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான். இந்த சுவையான இனிப்பு பண்டங்கள் குறைவான விலையில் கிடைக்கும் ஒரு ஸ்தாபனம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான்
நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான் மக்களின் உடல் ஆரோக்யத்தை கணக்கில் கொண்டு அவர்களுக்கு ஏற்ற வகையில் உணவு மற்றும் இனிப்பு பண்டங்களை தயாரிக்கின்றன. நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த ஆரோக்யமான இனிப்பு பண்டம்
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.












Click it and Unblock the Notifications