ஊட்டச்சத்துகளின் ஊற்றாய் விளங்கும் ஸ்பெஷல் பால்கோவா உங்களுக்கும் வேணுமா?
ஸ்ரீவில்லிபுத்தூர் அல்லது திருவில்லிப்புத்தூர் ,தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உட்பட்ட ஒரு நகராட்சி ஆகும். இங்கே இரண்டு முக்கிய தொழில்கள் காலம் காலமாக செய்து வருகின்றன. அது தான் நெசவு தொழில் மற்றும் பால்கோவா தயாரிப்பது. இவர்கள் இது ஒரு வேலையாக அல்ல, பாரம்பரியமாக ஒரு கலாச்சாரமாக கடைப்பிடித்து வருகின்றன. முக்கியமாக இங்கு தயாரிக்கப்படும் இந்த உன்னதமான பால்கோவை வெளிநாட்டில் அதிகமாக ஏற்றுமதி செய்கின்றன.
பால்கோவா, தரமாகவும், சுவையாகவும் மற்றும் ஆரோக்யமாகவும் கிடைக்கும் ஒரே இடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் தான். தண்ணீர் கலக்காத சுத்தமான பாலில் பால்கோவா செய்தால் அதன் ருசியே தனி.
ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா:
பாண்டிய மன்னன் வல்லபதேவன் அரண்மனையில் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வென்று வந்த பொன் மூலம் தனது மருமகனான பெருமாளுக்கு 11 அடுக்குகள் கொண்ட 192 அடி உயர கோபுரத்தைக் கட்டினாராம். அத்தனை பெருமை பெற்றஇந்த கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாகவும் இருக்கிறது.
உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பிரத்யேகசுவையில் தயாரிக்கப்படும் உணவுகள் உலகப் புகழ் பெறுவது போலவே, கோயில் பிரசாதங்கள் மட்டுமன்றி, கோயிலிருக்கும் ஊரில் கிடைக்கும் உணவுகளும் புகழ் பெற்றுவிடுகின்றன.
இந்த வகையில் உலக அளவில் மிக பிரபலமானது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. இது பாலும் சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம்
எப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்வது? வாருங்கள் பார்ப்போம்!!
தேவையான பொருட்கள்:
பால் - 10 லிட்டர்
சர்க்கரை - 1/2 கிலோ
செய்முறை:
தண்ணீர் கலக்காத சுத்தமான பால் 10 லிட்டர் எடுத்து கொள்ள வேண்டும். அதை ஒரு அடி கனமான பத்திரத்தில் ஊற்றி, அதை அடுப்பில் வைத்து கிண்டி கொண்டே இருக்க வேண்டும். கிண்டி கொண்டே இருக்க வேண்டும், கிண்டாமல் விட்டு விட்டால் பால் அடிபிடித்து விடும். பால்கோவாவின் நிறம் மற்றும் சுவை மாறி விடும்.
இப்படியே ஒரு 20 நிமிடம் வரை பாலினை மட்டும் கிண்டி கொண்டு இருக்க வேண்டும். அதன் பிறகு பால் நன்கு சூடாகி கொதிக்க ஆரம்பித்த உடன் சர்க்கரையை பாலில் போட்டு மறுபடியும் கிண்ட வேண்டும். சுமார் ஒரு 15 நிமிடம் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது பால் கட்டியாகி அதனுடன் இனிப்பும் கலந்து ஒரு வித இழகிய நிலையில் பால்கோவா வந்த பின் ஒரே முறை நன்கு கிண்டினால் நல்ல மனமுடன் கூடிய பால் மனம் மாறாத சுத்தமான பால்கோவா தயார்.
பால்கோவா தயாரிக்கும் பொழுது செய்ய வேண்டியது என்னவென்றால் பாலினைக் இடைவிடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்க்கு பொறுமை மிக மிக அவசியம், ஆனால் இப்பொழுது உள்ள பெண்மணிகளுக்கு பொறுமை இருப்பதே இல்லை. ஆனால் இவர்கள் பல பேக்கரி கடைகளுக்கு சென்று தரமற்ற பால்கோவா வாங்கி உண்பதினால் உடல் நலம் கெட்டுவிடும்
ஆனால் நம் உடல் நலத்தையும், ஆரோக்யத்தையும் கணக்கில் கொண்டு நமக்கு தரமான முறையில் இந்த சாத்தூர் சீரணி மிட்டாயை தருவது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான். இப்படி பட்ட பல சுவையான இனிப்பு பண்டங்கள் குறைவான விலையில் கிடைக்கும் ஒரே இடம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தாங்க
நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த ஆரோக்யமான இனிப்பு பண்டம.