10ம் வகுப்பு முடிவுகள்- 5 பிறமொழிப் பாட மாணவர்கள் 500 மதிப்பெண்களுடன் சாதனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இத்தேர்வில் பிறமொழிகளில் படித்த மாணவர்களில் 500க்கு500 மதிப்பெண்கள் பெற்று 5 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் கட்டாய கல்வி சட்டத்தின் படி பிற மொழிகளை முதன்மை பாடமாக கொண்டு தேர்வு எழுதும் கடைசி பிரிவு மாணவர்கள் இவர்களே.
வரும் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் முதன்மை பாடமாக தமிழ் மொழியில் தேர்வு எழுத உள்ளனர்.
இதனால் தமிழ் மொழிப்பாடத்தில் 100க்கு100 மதிப்பெண் எந்த மாணவராலும் எடுக்க முடியாது. ஆனாலும் தேர்வுத்துறை இந்தாண்டு நடைபெற்ற தேர்வில் முதன் முறையாக மொழிப்பாடத்துக்கு கோடிட்ட தாள்களை அளித்ததால் மாணவர்கள் அழகாக எழுத முடிந்ததாக தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications