கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை ஆலய 45-வது தேர்விழா.. கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
தூய பாத்திமா ஆலயத்தின் 45-வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில் 45-ம் ஆண்டு தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் கோலாகலமாக இன்று துவங்கியது.
கிருஷ்ணகிரியின் மையப்பகுதியில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தல ஆலயம். இந்த ஆலயத்தின் 45-ம் வருட தேர் திருவிழா கொடி ஏற்றத்துடன் இன்று வெகு விமரிசையாக துவங்கியது.
அன்னை வேளாங்கன்னி திருத்தலத்தின் அதிபர் அருள்திரு. பிரபாகர் தலைமையில் நடைபெற்ற இந்த திருவிழாவின் போது, ஆலயத்தின் முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் 45-ம் ஆண்டு திருவிழா கொடியினை மந்தரித்து ஏற்றினார்கள்..
முன்னதாக, ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்திரு. சூசை முந்நிலையில் நவநா\ள் ஜெபம் மற்றும் கூட்டுத்திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த தேர்திருவிழா நிறைவுநாளின் போது, மாபெரும் வாண வேடிக்கையுடன் பாத்திமா அன்னையின் தேர் பவனி கிருஷ்ணகிரி நகர வீதிகளில் உலா வர உள்ளது.
இந்த கொடியேற்ற விழாவில் கிருஷ்ணகிரி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.