For Daily Alerts
Just In
ஈழத் தமிழர்கள் பற்றி ப.சிதம்பரம் ஒரு வார்த்தை பேசியதுண்டா?: பொன். ராதாகிருஷ்ணன்
பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மதுரை சென்றார். அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில்,
மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தமிழன் என்று சொல்லிக்கொள்ள தகுதி அற்றவர். இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மேலும் அவர் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறை பிடிக்கப்படுவதும் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்றார்.
லோக்சபா தேர்தல் நெருங்கும் வேளையில் கூட்டணி விவகாரத்தில் பாஜக தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
BJP leader Pon. Radhakrishnan told that finance minister P. Chidambaram doesn't have the qualification to call himself a tamil.
Story first published: Monday, February 10, 2014, 15:53 [IST]