முதல்வர் பதவிக்கு சசிகலா தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கும் உள்ளது - ப.சிதம்பரம்

தமிழக முதல்வராவதற்கு சசிகலா தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.

அதனையடுத்து, தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அதேபோல், அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

P.Chidambaram twitts about Sasikala as CM

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டசபை குழுத் தலைவராக சசிகலாவை ஏகமனதாக தேர்வு செய்துள்ளனர். . அதன்படி, தமிழக முதல்வராக விரைவில் பதவியேற்க உள்ளார் சசிகலா.

இது குறித்து அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்து கூறி வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வராவதற்கு சசிகலா தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

தங்களது தலைவரை தேர்வு செய்யும் உரிமை அதிமுகவினருக்கு உள்ளது. அதேபோல், தமிழக முதல்வராவதற்கு சசிகலா தகுதியானவரா என்று கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கும் உள்ளது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் நாற்காலியை காமராஜர், அண்ணா போன்றவர்கள் அலங்கரித்த காலத்தை பெருமையுடன் நினைவு கூறுவதாக குறிப்பிட்டுள்ள சிதம்பரம், அதற்கு எதிரான பாதையில் அதிமுக மற்றும் தமிழக மக்கள் பணிக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+