பச்சமுத்துவுக்கு ஜாமீன் தர பெற்றோர் கடும் எதிர்ப்பு- விசாரணை நாளை மறுநாள் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனங்களின் தலைவர் பச்சமுத்துவின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை மறுநாள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக கூறி 112 மாணவர்களிடம் ரூ75 கோடி மோசடி செய்தார் பச்சமுத்து என்பது வழக்கு. இந்த வழக்கில் பச்சமுத்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது ஜாமீன் மனுவை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி பச்சமுத்து தாக்கல் செய்தார்.
இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது பதில் மனுத் தாக்கல் செய்ய போலீஸ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று நாளை மறுநாள் பச்சமுத்துவின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications