மழையால் மகிழ்ச்சி அடைய முடியாத விவசாயிகள்.. நெற் பயிர்கள் சேதமடைந்ததால் வேதனை!
தென்காசி: நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனராம்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பருவமழை பெய்து வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாயநிலங்களில் ஒருபுறம் விவசாயப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் தென்காசி வட்டாரப் பகுதிகளான பண்பொழி, வடகரை, செங்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நூறு ஏக்கர் நிலங்களில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக இன்னும் விளைந்த நெற்க்கதிர்களை அறுவடை செய்ய முடியாமலும், அறுவடை செய்த நெல் நீரில் சேதமடைந்துள்ளதாலும் அவற்றை காய வைத்தும் நெல்மூடைகளை நல்ல விலைக்கு விற்க முடியாமலும் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு அறுவடைக்கு போதிய மழை இல்லாமல் நெற்பயிர்கள் வாடி பாதி போகம் தான் எடுத்தோம். இந்தாண்டு போதிய மழையில்லாமல் நெல்லை விளைய வைத்தும் தண்ணீர் இன்றி தவித்தோம். இப்போது அறுவடை செய்யும் நேரத்தில் மழைவந்து அதைக்கூட விற்பனை செய்ய முடியாமல் ஆக்கி விட்டதாக புலம்பினர். மேலும், ,அரசு இந்த பகுதியை ஆய்வு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications