குட்டிகரணம் போட்டாலும், பாகிஸ்தானால் நம்முடைய புதிய ரூபாய் நோட்டுகளை காப்பியடிக்க முடியாது!
புதிய இந்திய ரூபாய்த் நோட்டுகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்களால் பாகிஸ்தான் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்க முடியாது என உளவுத்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்திய ரூபாய் நோட்டுகள் போல பாகிஸ்தான் இனி கள்ள நோட்டு தயாரிக்க முடியாது என உளவுத்துறை கூறியுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைப்பதற்காக பாகிஸ்தான் இந்திய ரூபாய் நோட்டுகளைப் போன்ற கள்ள ரூபாய் நோட்டுகளை அந்நாட்டின் பெஷாவரில் அச்சடித்து வந்தது.

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் லஷ்கர் இ தொய்பா உதவியுடன் பாகிஸ்தான் இந்த வேலையை செய்து வருகிறது. மேலும் ஆண்டுக்கு 70 கோடி ரூபாய் மேல் இந்தியாவில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீர்குலைத்து வருகிறது.
இவற்றில் பெரும்பாலானவை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தான்.

நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் சவாலாக இருந்த கள்ள நோட் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்த மத்திய அரசு நேற்று முன் நாள் திடீரென 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.
திடீரென வந்த இந்த அறிவிப்பு மக்களை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது.மிகக் குறுகிய கால அவகாசத்தில் இந்த அதிரடி அறிவிப்பு நடைமுறைக்கு வந்ததால் மக்கள் சில அவதிக்கு ஆளானார்கள்.
இந்நிலையில் பல புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை பாகிஸ்தான் குட்டிகரணம் போட்டாலும் காப்பியடிக்க முடியாது என உளவுத்துறை தெரிவித்துள்ளது.கள்ள நோட்டு அச்சடிக்க முடியாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய ரூபாய் நோட்டுகளின் வரவால் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்றும் உளவுத்துறை அறிவித்துள்ளது.
மத்தியரசின் இந்த நடவடிக்கையால் அதிர்ந்து போன பாகிஸ்தான் தற்போது இந்திய ரூபாய் போல் கள்ள நோட்டுக்களை எப்படி அச்சடிப்பது என வருத்தத்தில் ஆழ்ந்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications