பூர்வா ஜோஷிபுரா எங்கிருந்தாலும் வாடிவாசலுக்கு வரவும்... பழனிபாரதி செம!
பீட்டா இந்தியா தலைவர் பூர்வா ஜோஷிபுரா எங்கிருந்தாலும் அலங்காநல்லூர் வாடிவாசலுக்கு வரவும் என கிண்டலடித்துள்ளார் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பழநிபாரதி.
சென்னை: பீட்டா இந்தியா தலைவர் பூர்வா ஜோஷிபுராவை கிண்டலடித்து கவிஞர் பழனிபாரதி போட்டுள்ள முகநூல் பதிவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்தவே முடியாது. நான் இதை சவாலாக சொல்கிறேன் என்று திமிராக பேசியவர் பூர்வா ஜோஷிபுரா. ஆனால் தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட சட்டத்தை தடுக்க முடியாது என்று சுப்ரீம் கோர்ட்டே நேற்று கூறி விட்டது. இதையடுத்து கடந்த 3 வருடமாக தடைபட்டுக் கிடந்த ஜல்லிக்கட்டு நடைபெறப் போகிறது.

இந்த நிலையில் பிரபல திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான பழனிபாரதி தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ''வெளிப்படையாக நான் சவால் விடுகிறேன்... தமிழர்கள் ஜல்லிக்கட்டை நடத்தவே முடியாது'' என்ற 'பீட்டா' பூர்வா ஜோஷிபுரா எங்கிருந்தாலும் அலங்கா நல்லூர் வாடிவாசலுக்கு வரவும்...! என்று கிண்டலடித்துள்ளார்.

இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பழனிபாரதி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் ஜல்லிக்கட்டு சட்டத்திற்குத் தடை விதிக்க முடியாது என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை பல்வேறு விதங்களில் கொண்டாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications